இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு பிரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டுள்ளனர் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இலங்கைத் தமிழர் இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
உள்நாட்டில் பிரிக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் பேசும் மக்களும், புலம் பெயர்வாழ் தமிழர்களும் ஒன்று பட்டு கூட்டு அரசியல் தலைமைத்துவத்தினை உருவாக்கினால் மட்டுமே இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பும் உரிமையும் உறுதிப்படுத்தப்படும்.
நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் தங்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கதறி அழுது கண்ணீர் மல்கி எங்களிடம் மன்றாடி கேட்டுக்கொண்டனர்.
இலங்கை பயணம் தொடர்பாகவும் அகதி முகாம்களில் மக்களின் உண்மை நிலை குறித்தும் விளக்கி தமிழக முதலமைச்சரின் மூலமாக இந்திய மத்திய அரசுக்க அறிக்கையினை சமர்ப்பிப்போம்.
மேலும், விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் தனியான அறிக்கை ஒன்றையும் நான் சமர்ப்பிப்பேன் என்றார் திருமாவளவன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
No comments:
Post a Comment